தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவிby eraeravi Today at 4:53 pm
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am
» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am
» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm
» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm
» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm
» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm
» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm
» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm
» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm
» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm
» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm
» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm
» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm
» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm
» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm
» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm
» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am
» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am
» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am
» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:19 am
» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm
» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm
» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am
» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am
» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am
» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am
» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am
» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am
» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am
ஜப்பானிய - தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு , நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி
ஜப்பானிய - தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு , நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி
ஜப்பானிய - தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு , நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி
நூலாசிரியர் - கவிஞர் பரிமளம் சுந்தர்
அட்டைப்பட நவீன ஓவியமே நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வித்தியாசமான வடிவமைப்பு. ஹைக்கூ பற்றிய புரிதலை ஏற்படுத்தும் அற்புத நூல். நூலாசிரியர்,என்னுரையில் குறிப்பிட்டது போல,"ஹைக்கூ வாசிக்க வேண்டும், யோசிக்க வேண்டும்,ரசிக்க வேண்டும்" ஹைக்கூ உணர்விணை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். முனைவர் பட்ட ஆய்வேடுகள் எல்லாமே இனிமையானவை என்று சொல்ல முடியாது. தலைப்பு சார்ந்து அதில் உள்ள ஆர்வம் சார்ந்து இனிமை மாறுபடும். ஆனால் இந்த நூல் ஆய்வேடாக இருந்தாலும்,சராசரி மனிதர்காளலும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக இருப்பது கூடுதல் சிறப்பு. ஹைக்கூ பற்றி குறைவான மதிப்பீடு உள்ளவர்கள் இந்நூல் படித்தால் மாறுவது உறுதி.
நூலாசிரியர் கவிஞர் பரிமளம் சுந்தர்,ஹைக்கூ படைப்பாளி என்பது கூடுதல் தகுதியாகி விடுகின்றது.அவரது ஹைக்கூ,
சிவனின்
நெற்றிப்பட்டை
ஹைக்கூ - வித்தியர்சமான சிந்தனை
படைப்பாளியாக இருந்து கொண்டு படைப்புகளை ஆய்வு செய்யும் போது புதிய பரிமாணம் தோன்றும். ஆது போலத் தான் நூல் முழுவதும் ஹைக்கூ கவிதைகள் பற்றி அலசி ஆராய்ந்து அவர் பெற்ற இன்பம் வையகம் பெறுக! என்ற உயர்ந்த உள்ளத்துடன் படைத்து இருக்கிறார்கள்.இந்த நூலிற்காக எத்தனை நூல்களை படித்து இருப்பார் என்று எண்ணிப் பார்க்கும் போது வியப்பாக இருக்கின்றது. நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது.பின்குறிப்பு மட்டும் 111 நூல்கள்,272 மேற்கோள் இதழ்கள் என பட்டியலிட்டு உள்ளார்கள்..
ஹைக்கூ கவிதைகளை பட்டிமன்ற மேடைகளில் பிரபலப்படுத்திய ஒரே நடுவர் முனைவர் இரா.மோகன் அவர்கள்.ஹைக்கூ கவிதை குறித்து முதன் முதலில் பட்டிமன்றம் நடத்தியவர் மட்டுமல்ல,ஹைக்கூ கவிதைகளின் தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியவர்.நூலாசிரியருக்கு முனைவர் பட்ட நெறியாளராக நெறிபடுத்தியது மட்டுமின்றி இந்நூலிற்கு மிகச் சிறப்பான அணிந்துரை நல்கி,பெருமை சேர்த்து இருக்கிறார்கள் இரா.மோகன் அவர்கள்.
"சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம்" என்று ஹைக்கூவிற்கான விளக்கம் மிக நன்று.
ஜப்பானிய ஹைக்கூ கவிதையின் வராலாற்றை ஆண்டுகளில் விளக்கி,வரைபடம் வரைந்து,ஜப்பானிய ஹைக்கூவிற்கான மூலங்கள் எவை? ஏன உணர்த்துகின்றார். பௌத்தம், தாவோயிசம்,கன்பூசியனிசம்,சீனக் கவிதை,ஜென் இவைகளின் கலவையாக ஜப்பானிய ஹககூ உருவான விதம் பற்றி நுட்பமாக விளக்கி உள்ளார்.
ஹைக்கூவை தமிழில் அறிமுகப்படுத்தியவர் மகாகவி பாரதியார்.1916ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வெளியான சுதேசிமித்திரன் நாளேட்டில் ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். ஏனவே ஹைக்கூ கவிதை தமிழில் முதன் முதலில் அறிமுகமாகக் காரணமானவர் மகாகலி பாரதியார் என்ற கற்கண்டுச் செய்தியினை பதிவு செய்துள்ளார்.
"தமிழில் ஹைக்கூ" என்ற விதை இன்று மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து உள்ளது. ஒரு விதை எப்படி? விருட்சமானது என்ற விளக்கத்தை தனது கடின உழைப்பால்,ஆராய்ச்சியால் வரலாற்றை நன்கு பதிவு செய்து உள்ளார்கள்.ஹைக்கூ கவிதைகள் குறித்தான அத்தனை நூல்கள் பற்றியும்,கட்டுரைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். படித்து,ரசித்து,மகிழ எண்ணிலடங்கா ஹைக்கூ,நூலில் உள்ளன.அவற்றில் சில உங்கள் பார்வைக்கு,
தென்றலே பார்த்துப் போ
தெரு முனையில்
அரசியல் கூட்டம் சு.முத்து
தமிழை வளர்ப்பதில் ஈழத் தமிழர்களின் பங்கு போற்றுதலுக்குரியது.புலம் பெயர்ந்த வலி மிகுந்த வாழ்விலும்,தமிழை அவர்கள் மறப்பதில்லை.ஈழத்து கவிஞர் முரளிதரன் எழுதிய கூடைக்குள் தேசம் என்ற நூலில் இருந்து ஆசிரியருக்கு பிடித்த ஹைக்கு.
ஏய்! யாரங்கே ஆற்றில்
பாலைக் கொட்டிவிட்டு ஓலமிடுவது
நீர்வீழ்ச்சி
இந்த ஹைக்கூ-வை படிக்கும் போது நம் கண் முன் குற்றால நீர்வீழ்ச்சி மட்டுமல்ல, நயாகாரா நீர்வீழ்ச்சியும் தோன்றுவது உண்மை.இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. திரு.முரளிதரனின் நூலைப் பற்றி அறியும் வாய்ப்பை நல்கிய நூலாசிரியர் பரிமளம் சுந்தர் பாராட்டுக்குறியவர். ஆய்வு செய்து இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள் நல்ல பல ஹைக்கூ கவிதைகளை.
சிரித்தது நீ
என்குள் எப்படி
இறக்கைகள்?
நொண்டிகள் நடக்கிறார்கள
குருடர்கள் பார்க்கிறார்கள்
நற்செய்திக் கூட்டம் சுவரொட்டியில்
சடங்கு செய்ய வேண்டும் என்ன
சாதி சொல்லுங்கோ சாதிச்
சண்டையில் மாண்டவன்
ஹைக்கூ ஆர்வலர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அற்புத நூல்.
நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளில்,"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"
போல சில மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். இந்த ஹைக்கூ கவிதைகளை படிக்கும் போதே ஹைக்கூ கவிதையின் வீச்சை நீங்கள் உணர முடியும்.ஜப்பானிய ஹைக்கூகளைப் போல இயற்கையை பாடுவதிலும்,சமுதாயத்தை சாடுவதிலும் சளைத்தவர்கள் அல்ல தமிழன் என நிரூபணம் செய்திடும் ஹைக்கூ.
காதலின் வெற்றி
இருவருக்கும் கல்யாணம்
தனித்தனியே
உன்னால் முடிகிறது குயிலே
ஊரறிய அழுவதற்கு
நான் மனிதப் பெண்
Aபடப் போஸ்டரைப் பார்த்து
வெட்கப்பட்டது
குட்டிக் கழுதை
வீட்டு வாசலில் போர்டு
வெல்கம் என்கிறது
கேட்டில் நாய்கள் ஜாக்கிரதை
அணிலே நகங்களை வெட்டு
பூவின் முகங்களில்
காயங்கள்
போர்வை எடுத்து வா
குளிரில் நடுங்கும்
ரோஜா
மலரை யார் பறித்தது
கண்ணீர் வடிக்கிறதே
காம்பு
பூ உதிர்ந்த காம்பில்
வண்ணத்துப் பூச்சி
ஓ! காதல் கவிதை
யாரது
குளத்தில் கல் விட்டெறிந்தது
ஊடைந்ததே நிலா முகம்
நடுப்பகல்
சுடுமணல்
பாவம் என் சுவடுகள்
பழுத்த இலை
மலர்ந்த பூ
ஒரே காற்று
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் அழகாக மொழி பெயர்த்து,நூலாசிரியரின் மொழிப்புலமையை நிரூபித்து உள்ளார்.இப்படி ஹைக்கூ உணர்வை ஏற்படுத்தும் நூல் இது. ஹைக்கூ வரலாற்றை படம் பிடித்துக் காட்டும் அற்புது நூல்.ஹைக்கூவில் என்ன உள்ளது என்று சொல்பவர்களுக்கு விடை சொல்லும் நூலாக உள்ளது.
"என்ன வளம் இல்லை இந்த ஹைக்கூவில்,ஏன் குறை சொல்ல வேண்டும் ஹைக்கூவை" !! என்பதை உணர்த்தும் உன்னதப் படைப்பு.
நூலாசிரியர் - கவிஞர் பரிமளம் சுந்தர்
அட்டைப்பட நவீன ஓவியமே நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வித்தியாசமான வடிவமைப்பு. ஹைக்கூ பற்றிய புரிதலை ஏற்படுத்தும் அற்புத நூல். நூலாசிரியர்,என்னுரையில் குறிப்பிட்டது போல,"ஹைக்கூ வாசிக்க வேண்டும், யோசிக்க வேண்டும்,ரசிக்க வேண்டும்" ஹைக்கூ உணர்விணை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். முனைவர் பட்ட ஆய்வேடுகள் எல்லாமே இனிமையானவை என்று சொல்ல முடியாது. தலைப்பு சார்ந்து அதில் உள்ள ஆர்வம் சார்ந்து இனிமை மாறுபடும். ஆனால் இந்த நூல் ஆய்வேடாக இருந்தாலும்,சராசரி மனிதர்காளலும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக இருப்பது கூடுதல் சிறப்பு. ஹைக்கூ பற்றி குறைவான மதிப்பீடு உள்ளவர்கள் இந்நூல் படித்தால் மாறுவது உறுதி.
நூலாசிரியர் கவிஞர் பரிமளம் சுந்தர்,ஹைக்கூ படைப்பாளி என்பது கூடுதல் தகுதியாகி விடுகின்றது.அவரது ஹைக்கூ,
சிவனின்
நெற்றிப்பட்டை
ஹைக்கூ - வித்தியர்சமான சிந்தனை
படைப்பாளியாக இருந்து கொண்டு படைப்புகளை ஆய்வு செய்யும் போது புதிய பரிமாணம் தோன்றும். ஆது போலத் தான் நூல் முழுவதும் ஹைக்கூ கவிதைகள் பற்றி அலசி ஆராய்ந்து அவர் பெற்ற இன்பம் வையகம் பெறுக! என்ற உயர்ந்த உள்ளத்துடன் படைத்து இருக்கிறார்கள்.இந்த நூலிற்காக எத்தனை நூல்களை படித்து இருப்பார் என்று எண்ணிப் பார்க்கும் போது வியப்பாக இருக்கின்றது. நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது.பின்குறிப்பு மட்டும் 111 நூல்கள்,272 மேற்கோள் இதழ்கள் என பட்டியலிட்டு உள்ளார்கள்..
ஹைக்கூ கவிதைகளை பட்டிமன்ற மேடைகளில் பிரபலப்படுத்திய ஒரே நடுவர் முனைவர் இரா.மோகன் அவர்கள்.ஹைக்கூ கவிதை குறித்து முதன் முதலில் பட்டிமன்றம் நடத்தியவர் மட்டுமல்ல,ஹைக்கூ கவிதைகளின் தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியவர்.நூலாசிரியருக்கு முனைவர் பட்ட நெறியாளராக நெறிபடுத்தியது மட்டுமின்றி இந்நூலிற்கு மிகச் சிறப்பான அணிந்துரை நல்கி,பெருமை சேர்த்து இருக்கிறார்கள் இரா.மோகன் அவர்கள்.
"சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம்" என்று ஹைக்கூவிற்கான விளக்கம் மிக நன்று.
ஜப்பானிய ஹைக்கூ கவிதையின் வராலாற்றை ஆண்டுகளில் விளக்கி,வரைபடம் வரைந்து,ஜப்பானிய ஹைக்கூவிற்கான மூலங்கள் எவை? ஏன உணர்த்துகின்றார். பௌத்தம், தாவோயிசம்,கன்பூசியனிசம்,சீனக் கவிதை,ஜென் இவைகளின் கலவையாக ஜப்பானிய ஹககூ உருவான விதம் பற்றி நுட்பமாக விளக்கி உள்ளார்.
ஹைக்கூவை தமிழில் அறிமுகப்படுத்தியவர் மகாகவி பாரதியார்.1916ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வெளியான சுதேசிமித்திரன் நாளேட்டில் ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். ஏனவே ஹைக்கூ கவிதை தமிழில் முதன் முதலில் அறிமுகமாகக் காரணமானவர் மகாகலி பாரதியார் என்ற கற்கண்டுச் செய்தியினை பதிவு செய்துள்ளார்.
"தமிழில் ஹைக்கூ" என்ற விதை இன்று மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து உள்ளது. ஒரு விதை எப்படி? விருட்சமானது என்ற விளக்கத்தை தனது கடின உழைப்பால்,ஆராய்ச்சியால் வரலாற்றை நன்கு பதிவு செய்து உள்ளார்கள்.ஹைக்கூ கவிதைகள் குறித்தான அத்தனை நூல்கள் பற்றியும்,கட்டுரைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். படித்து,ரசித்து,மகிழ எண்ணிலடங்கா ஹைக்கூ,நூலில் உள்ளன.அவற்றில் சில உங்கள் பார்வைக்கு,
தென்றலே பார்த்துப் போ
தெரு முனையில்
அரசியல் கூட்டம் சு.முத்து
தமிழை வளர்ப்பதில் ஈழத் தமிழர்களின் பங்கு போற்றுதலுக்குரியது.புலம் பெயர்ந்த வலி மிகுந்த வாழ்விலும்,தமிழை அவர்கள் மறப்பதில்லை.ஈழத்து கவிஞர் முரளிதரன் எழுதிய கூடைக்குள் தேசம் என்ற நூலில் இருந்து ஆசிரியருக்கு பிடித்த ஹைக்கு.
ஏய்! யாரங்கே ஆற்றில்
பாலைக் கொட்டிவிட்டு ஓலமிடுவது
நீர்வீழ்ச்சி
இந்த ஹைக்கூ-வை படிக்கும் போது நம் கண் முன் குற்றால நீர்வீழ்ச்சி மட்டுமல்ல, நயாகாரா நீர்வீழ்ச்சியும் தோன்றுவது உண்மை.இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. திரு.முரளிதரனின் நூலைப் பற்றி அறியும் வாய்ப்பை நல்கிய நூலாசிரியர் பரிமளம் சுந்தர் பாராட்டுக்குறியவர். ஆய்வு செய்து இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள் நல்ல பல ஹைக்கூ கவிதைகளை.
சிரித்தது நீ
என்குள் எப்படி
இறக்கைகள்?
நொண்டிகள் நடக்கிறார்கள
குருடர்கள் பார்க்கிறார்கள்
நற்செய்திக் கூட்டம் சுவரொட்டியில்
சடங்கு செய்ய வேண்டும் என்ன
சாதி சொல்லுங்கோ சாதிச்
சண்டையில் மாண்டவன்
ஹைக்கூ ஆர்வலர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அற்புத நூல்.
நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளில்,"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"
போல சில மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். இந்த ஹைக்கூ கவிதைகளை படிக்கும் போதே ஹைக்கூ கவிதையின் வீச்சை நீங்கள் உணர முடியும்.ஜப்பானிய ஹைக்கூகளைப் போல இயற்கையை பாடுவதிலும்,சமுதாயத்தை சாடுவதிலும் சளைத்தவர்கள் அல்ல தமிழன் என நிரூபணம் செய்திடும் ஹைக்கூ.
காதலின் வெற்றி
இருவருக்கும் கல்யாணம்
தனித்தனியே
உன்னால் முடிகிறது குயிலே
ஊரறிய அழுவதற்கு
நான் மனிதப் பெண்
Aபடப் போஸ்டரைப் பார்த்து
வெட்கப்பட்டது
குட்டிக் கழுதை
வீட்டு வாசலில் போர்டு
வெல்கம் என்கிறது
கேட்டில் நாய்கள் ஜாக்கிரதை
அணிலே நகங்களை வெட்டு
பூவின் முகங்களில்
காயங்கள்
போர்வை எடுத்து வா
குளிரில் நடுங்கும்
ரோஜா
மலரை யார் பறித்தது
கண்ணீர் வடிக்கிறதே
காம்பு
பூ உதிர்ந்த காம்பில்
வண்ணத்துப் பூச்சி
ஓ! காதல் கவிதை
யாரது
குளத்தில் கல் விட்டெறிந்தது
ஊடைந்ததே நிலா முகம்
நடுப்பகல்
சுடுமணல்
பாவம் என் சுவடுகள்
பழுத்த இலை
மலர்ந்த பூ
ஒரே காற்று
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் அழகாக மொழி பெயர்த்து,நூலாசிரியரின் மொழிப்புலமையை நிரூபித்து உள்ளார்.இப்படி ஹைக்கூ உணர்வை ஏற்படுத்தும் நூல் இது. ஹைக்கூ வரலாற்றை படம் பிடித்துக் காட்டும் அற்புது நூல்.ஹைக்கூவில் என்ன உள்ளது என்று சொல்பவர்களுக்கு விடை சொல்லும் நூலாக உள்ளது.
"என்ன வளம் இல்லை இந்த ஹைக்கூவில்,ஏன் குறை சொல்ல வேண்டும் ஹைக்கூவை" !! என்பதை உணர்த்தும் உன்னதப் படைப்பு.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2196
Points : 5024
Join date : 18/06/2010
Re: ஜப்பானிய - தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு , நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி
கவிதைகளின் வரலாற்றில் புதியதோர் பரிணாம வளர்ச்சி
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: ஜப்பானிய - தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு , நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி
வணக்கம் மிக்க நன்றி
அன்புடன் இரா .இரவி

அன்புடன் இரா .இரவி

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2196
Points : 5024
Join date : 18/06/2010
Re: ஜப்பானிய - தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு , நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி
ஒரு தேடலின்போது கிடைத்தது...
பதிவுக்குப் பாராட்டுகள் கவிஞரே...
பதிவுக்குப் பாராட்டுகள் கவிஞரே...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73
Re: ஜப்பானிய - தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு , நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2196
Points : 5024
Join date : 18/06/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum